Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Non-Veg Recipe
மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - முக்கால் கிலோ,
மட்டன் - 1/2 கி,
இஞ்சி - 50 கிராம்,
பூண்டு - 25 பல்,
பெரிய வெங்காயம் - 4,
சின்ன வெங்காயம் - 15,
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4,
கிராம்பு - 4,
பட்டை - 4 துண்டு,
ஜாதிக்காய் - பாதி,
ஏலக்காய் - 4,
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்,
தேங்காய் - 1 மூடி,
முந்திரி - 10,
தயிர் - 1/2 கப்,
எலுமிச்சம்பழம் - 1 மூடி,
புதினா - 1 கட்டு,
மல்லி - 1 கட்டு,
நெய் - 1/2 கப்,
எண்ணெய் - 1/2 கப்.

தாளிக்க : கிராம்பு - 3, பட்டை - 3 சிறிய துண்டு, ஏலக்காய் - 3, பிரிஞ்சி இலை - 1, சோம்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:

மட்டனில் 1/4 கப் தயிர், மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், கரம்மசாலா, உப்பு 1டீஸ்பூன் போட்டு 5 விசில் விட்டு வேகவைக்கவும்.

பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

பெரியவெங்காயம், சின்னவெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

பூண்டை தனியாக அரைத்துக்கொள்ளவும்.

துருவிய தேங்காய், இஞ்சி, முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும். (இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ்க்காகத்தான். )

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும்.

காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.

வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள் போட்டு வதக்கவும்.

5 நிமிடம் போல வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியை போடவும்.

தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.

இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் ஊற்றவும்.

உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.

பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும்.

பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com